Monday, December 9, 2013

PETIT SEMINAIRE
தங்கத் தமிழினை 
தரணிக்கு தருவித்தது 
ஆங்கில அறிவினை 
அள்ளி அருளியது
கணித கலையினை 
கடமையுடன் கற்பித்தது
விஞ்ஞான வளர்ச்சியினை
வியக்குமளவு விதைத்தது
உயிரியல் உண்மைகளை
உள்ளத்தில் உருவித்தது
புவியல் படைப்புகளை
புலனுக்கு புகட்டியது
வரலாற்று வாழ்காலத்தை
வாழ்விற்கு வகுத்தது
புதுவையில் பலரின்
புகழில் புரள்வது
எழில்மிக்க பள்ளியே
என் பள்ளி .
...சிவராஜ்

No comments:

Post a Comment